உரோமை அரசினால் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு ஆறுதலாய் இருக்கவும், மறைசாட்சி முடியைப்பெறவும் போர்ச்சேவகராகிய புனித செபஸ்தியாரே, என்மீது இரக்கமாயிரும், பாவியின் மரணத்தை விரும்பாமல் அவன் குணமடைய வேண்டுமென்று விரும்புகிற இறைவன், பாவிகள் மனந்திரும்பவும், புண்ணிய ஆன்மாக்கள் புனிதமடையவும், வைசூரி, பேதி, பெருவாரிக்காய்ச்சல் முதலிய நோய்களை அனுப்பினாலும் சில சமயங்களில் பாடுபட்டுப் பேறடைந்த புனிதர்களுடைய வேண்டுதலாலே வேதனைப்படுபவர்களுக்கு, அவர்கள் துன்ப நாளில் ஆறுதலைக் கட்டளையிடுகிறார் என்பதை நான் அறிந்துள்ளேன். இந்த நோயால் உமது உதவியைக் கேட்டு மன்றாடுகிறேன். உரோமாபுரியில் உமது பெயரால் பீடம் எழுப்பியபின்தான் நச்சுக் காய்ச்சல் நீங்கியதென்பதையும் நான் அறிவேன்.
தியோக்கிளேசியன் அரசனுக்கு அஞ்சாத வன்மைமிகு மறைசாட்சியாகிய புனித செபஸ்தியாரே! இந்த வேதனை மிகுந்த நோயில் என்னைக் கைவிடாதேயும். என் பாவங்கள் பொருட்டு வந்த இந்த நோயை நான் பொறுமையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் இறைவன் என்மீது ஒரு பாரத்தைச் சுமத்தியுள்ளார். நானோ மிக பலவீனன். காற்றால் அடிக்கப்பட்ட சருகுபோலும், துரும்புபோலும், தத்தளிக்கிறேன். இறைவன் கோபத்தைத் தாங்க நான் வல்லவன் அல்லவே. இந்தத் துன்பக் கலத்தை நான் 20 பருக வேண்டுமென்பது இறைவன் திருவுளமானால் நான் வீரம் பொருந்திய பொறுமையோடு அதனைக் குடிக்க எனக்காக ஆண்டவரை மன்றாடும். என் கேட்டுக்காக அல்ல, என் நலத்திற்காகவே இறைவன் என்னைத் தண்டிக்கிறார். காயப்படுத்துபவரும் அவரே. குணப்படுத்துபவரும் அவரே. நான் நலமுடன் இருக்கும் பொழுது இறைவனை அன்பு செய்வது போல, துன்ப நாளிலும் அவரை அன்பு செய்வேனாக. நான் இந்த வியாதியில் அலையுண்டு கலங்காதவாறு இந்தக் கசப்பான கலத்தை அவர் திருக்கரங்களிலிருந்து மகிழ்ச்சியோடு வாங்கிப் பருக வேண்டிய தைரியத்தைப் பெற்றுத் தாரும்.
தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மக்களை மறக்காத இறைவன், வைசூரி, பேதி, காய்ச்சல் முதலிய நோய்களையும், வறுமை, போர். பஞ்சம் முதலிய பெரிய துன்பங்களையும் அன்பு மிகுதியால்தான் அனுப்புகிறார் என்று அறிந்திருந்தும், ஏன் நான் அவர்மீது முறையிட வேண்டும்? ஆதலால் புனித செபஸ்தியரே, இந்த நோய் விரைவில் குணமாக இறைவனுக்குத் திருவுளமில்லையெனில், அதை நான் நல்ல மனதோடு பொறுத்துக்கொள்ள எனக்குத் தைரியத்தையாகிலும் தந்தருள எனக்காக மன்றாடும். என் பாவங்களின் பரிகாரத்திற்காக இன்னும் மிகுதியான நோய்களும், துன்பங்களும் எனக்கு வர வேண்டும் என்று நான் ஆசிக்க வேண்டியதுதான். புனிதர்களே துன்ப, துரித, நோய்களை ஆசித்திருக்க. பாவியாகிய நான் நித்திய கடலில் வீசப்பட்ட பேற்றினை அடைய நோய், வருத்தங்களை ஆசிக்காமல் இருப்பது முறையா? ஆனால் புனித செபஸ்தியாரே, நான் பலவீனனும் புண்ணிய வாழ்வில் திடனற்றவனாயும் இருப்பதால் தேவரீர் என்மீது இரங்கி இந்தத் துன்பங்களைப் பொறுமையோடு நான் சகித்துக் கொள்ள எனக்காக ஆண்டவரை மன்றாடும். ஆமென்.
1. பிதாவின் திருவுள்ளத்தினால் உயர்ந்த குடும்பத்தினரான தாய் தகப்பனிடத்திலே பிறந்து, எண்ண இயலாத புண்ணிய நன்மைகளைச் செய்து திருமறைக்காகத் துன்பப்பட்ட கிறிஸ்தவர்களுக்காகப் படையில் பணிபுரிந்தவரான புனித செபஸ்தியாரே, இறைமக்கள் அனைவரையும் எல்லாத் தீமைகளிலிருந்தும் இறைவன் இரட்சித்தருள வேண்டுமென்று இறைவனிடம் நீரே மன்றாட வேண்டுமென்று உம்மைப் பார்த்து வேண்டுகிறோம்.
-பர, அருள், திரி
2. வியப்புக்குரிய ஞானத்தோடும், துணிவோடும் அநேக அரசர்களுக்கும், பிரபுக்களுக்கும் மெய் மறையை அறிக்கையிட்டுப் புத்திமதி சொன்னவரான புனித செபஸ்தியாரே, உலகமெங்கும் பசாசின் வழிபாடு ஒழிந்து எல்லாரும் மெய்மறையை அறிந்து ஞானதீட்சை பெற்றுத் திருச்சபையில் இணைய வேண்டுமென்று நீரே இறைவனை மன்றாடும்படி உம்மை வேண்டுகிறோம்.
-பர, அருள், திரி
-பர, அருள், திரி
4. இறைவனுக்குப் பிரியமாகவும், திருமறைக்காகத் துன்பப்படுகிற விசுவாசிகளுக்கு உதவியாகவும் இருந்து வியாதிக்காரருக்கு இறை உதவியால் ஆரோக்கியம் கொடுத்த புனித செபஸ்தியாரே, கிறிஸ்தவர்களுக்கு விஷபேதி, வாந்தி, வைசூரி போன்ற வியாதியில்லாமல் இறைவன் காத்து இரட்சித்தருள வேண்டுமென்று மன்றாட உம்மை வேண்டுகிறோம்.
-பர, அருள், திரி
5. அனைத்துலகிலும் நற்பெயர் கொண்டவருமாய் திருமறைக்குத் தஞ்சமுமாய் இருந்த புனித செபஸ்தியாரே, திருச்சபைக்கு விரோதம் செய்கிறவர்களுக்கு இறைவன் நன்மனதை அருளவும், இந்த நாட்டுக்கு வேண்டிய தூய குருக்களை உருவாக்கி உண்மையின் நெறியில் எங்களை நடப்பிக்கவும், இறைவனை மன்றாடுமாறு உம்மை வேண்டுகிறோம்.
-பர, அருள், திரி
6. உலக மகிமை, பெருமை, புகழ், செல்வமெல்லாம் நீத்து இயேசுநாதரைப் பின்பற்றி உயிரைத் தர ஆழ்ந்த விசுவாசத்துடனே மாற்கு, மர்செல்லியனுக்குப் புத்தி சொல்லும் போது ஏழு தேவ தூதர்களுடன் இயேசுநாதர் வந்து உம்மைத் தழுவி “நம்மோடு கூட இருப்பாய்” என்று சொல்லக் கேட்டு மகிழ்ச்சியடைந்த புனித செபஸ்தியாரே. நாங்கள் எல்லாரும் புண்ணிய வழியிலே துணிவுடன் நடந்து பேரின்ப விண்ணுலக அரசில் சேர்ந்து இறைவனோடு வாழ்வு பெறத்தக்கதாக நீரே அவரை மன்றாடும்படி உம்மை வேண்டுகிறோம்.
-பர, அருள், திரி
-பர, அருள், திரி